When you
get up early, or sleep late – and whenever you find time, try and observe
nature – it is always wonderful !! அதிகாலை கதிரவன் - இரவியின் கதிர்கள்
புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை
!!!
என் வாழ்விலே. தினந்தோறும்
தோன்றும்..
சுக ராகம் கேட்கும்; எந்நாளும்
ஆனந்தம்....
வானில் தோன்றும் கோலம் - அதை
யார் போட்டதோ..
பனி வாடை வீசும் காற்றில், சுகம் யார் சேர்த்தோ...
எஸ் ஜானகி இனிய குரலில்
இசைத்தேவன் இளையராஜாவின் இன்னிசையில் தமிழகத்தை கட்டிப்போட்ட பாடல் - அலைகள் ஓய்வதில்லை
படத்தில். 1981ம்
ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
கார்த்திக், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். நாயகனுக்கும் நாயகிக்கும் அறிமுக படம்.
ஈகா மற்றும் பல திரையரங்குகளில்
சக்கை போடு போட்ட படத்தில், இந்த பாடல் இடம்
பெறவில்லை - பின்னாளில் இயக்குனர், அந்தப் பாடல் படத்தின் வேகத்தைக் குறைத்து, தொய்வை
ஏற்படுத்தும் என்று கருதி நீக்கியதாக கூறினார்.
..... அந்த படத்தில் 11 பாடல்கள் இருந்ததாக
ஞாபகம் !!!
20.1.2026

No comments:
Post a Comment