Search This Blog

Saturday, September 3, 2022

Shenbagame ! shenbagame !!

 ஒரே இடத்திலே இவ்வளவு செண்பகம் யான் கண்டதில்லை ! - படத்தை பார்த்தவுடன் என்ன நினைத்தீர்கள் ?? 


பட்டுப் பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்,

செண்பகமே, செண்பகமே!!  தென்பொதிகை சந்தனமே

 

சண்பகம் (Magnolia champaca)   மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூ!!  . எனினும், முதன்மையாக இது பயிரிடப்படுவது இதன் வெட்டு மரத்துக்காகவாகும். ?!?!? 

Instead of its fragrance, if you immediately thought of  Illayaraja, Gangai Amaran, Ramarajan, Nishanthi – you must be at least 35 + years old !!   "காடெல்லாம் பிச்சிப் பூவூ , கரையெல்லாம் செண்பகப் பூவூ"  - படித்த உடனே உங்களது உதடும் சேர்ந்து பாடியிருந்தால் உங்களுக்கு 50 வயது இருக்கலாம்.  'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியான சுஜாதா கதை - அக்காலங்களில் சுஜாதா எழுதும் தொடர்கதைகளுக்காகவே புத்தகங்கள் அதிகம் பிரதிகள் விற்றன.     ஜமீன் மாளிகையைச் சுற்றி நடக்கும் சில அமானுஷ்ய, மர்ம விவகாரங்கள் , உச்சகட்டமாக ஒரு கொலையும் நடைபெறுகிறது கிராமத்து சூழ்நிலையையே புரட்டிபோடுகிறது.   விறுவிறுப்பான இந்தக் கிராமத்து திரில்லர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.  1981ல் வந்த இந்த படத்தை   ஜி. என். ரங்கராஜன் இயக்க  பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா நடித்தனர்.  படம்  சுமாராகத்தான் ஓடியது.

No comments:

Post a Comment