Search This Blog

Thursday, July 27, 2023

Rufous Treepie ! - மோகனப் புன்னகையில் ஓர் நாள், மூன்று தமிழ் ?!?!

சின்னஞ்சிறு வயதில், எனக்கோர் சித்திரம் தோணுதடி

மின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும்  தோணுதடி ! ..  ….        ..

மோகனப் புன்னகையில் ஓர் நாள், மூன்று தமிழ் படித்தேன்

 


என் மன வானில் அல்ல, வீட்டு மாடியில் சிறகடித்து சென்றது இந்த பறவை.  காக்கையைப் போன்ற அலகு, கருந்தலை, மஞ்சள் பழுப்பு  நிறவுடல், வெள்ளைப் பட்டைகளுள்ள இறக்கை, கருமுனை கொண்ட சாம்பல் நிற வால் உடைய பறவை. இந்தப் பறவை பல விதமான ஒலிகளை எழுப்புமாம்.  அவற்றில் சில காதுக்கு மிக இனிமையானதாகவும், சில சாதாரணமானதாகவும் சில நாராசமானதாகவும் இருக்கும். இது சில வினாடிகள் இறக்கையை அடித்துக் கொண்டு நேர் கோட்டிலும், பின்னர் சிறிது தூரம் இறக்கையை அடிக்காமல் விரித்து வைத்துக் கொண்டு அதே நேர் பாதையிலும் பறக்கும்.  

The rufous treepie (Dendrocitta vagabunda) is a treepie, native to the Indian Subcontinent and adjoining parts of Southeast Asia. It is a member of the crow family, Corvidae. It is long tailed and has loud musical calls making it very conspicuous. It is found commonly in open scrub, agricultural areas, forests as well as urban gardens. Like other corvids it is very adaptable, omnivorous and opportunistic in feeding.  

The rufous treepie is primarily an arboreal omnivore feeding on fruits, nectar seeds,  invertebrates, small reptiles and the eggs and young of birds.  

வால் காக்கை (Rufous Treepie) என்பது காக்கைக் குடும்பத்திலுள்ள பறவைகளுள் ஒன்று. இது அரிகாடை என்றும் முக்குறுணி என்றும் மாம்பழத்தான் குருவி என்றும் கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கப்படும்.2]. நீண்ட வாலும் உரத்த இசைக் கூப்பாடும் (கோகீலா ... கோகீலா... என்ற தொனியில் இருக்கும்!!  என்கிறது விக்கிபீடியா)  இப்பறவை காக்கையைப் போலவே ஒரு அனைத்துண்ணி. இப்பறவையின் விலங்கியல் பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda)= ன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும்.  

முதலில் கண்ட பாடல்  இசைஞானி இளையராஜா இசையில் 'மீண்டும் கோகிலா' படத்தில் யேசுதாஸ் சைலஜா பாடியது - கண்ணதாசன் வரிகள்.   

 
PS:  identified as Rufous treepie by Google images.
 
With regards – S. Sampathkumar
27.7.2023 

No comments:

Post a Comment