Search This Blog

Sunday, March 31, 2024

சிறு பொன்மணி அசையும்

கல்லுக்குள் ஈரம் - ஒரு சினிமா குழுவினரின் இயக்குனரையும் ஹீரோவையும் காதலிக்கும் இரண்டு அப்பாவி கிராமத்து சிறுமிகளின் கதை.  அருணா பாரதிராஜாவையும், விஜயசாந்தி சுதாகரையும் காதலிப்பார்கள்.  இப்படத்தில் ஒரு இனிய பாடல் -  வரிகளுக்கு சொந்தக்காரர் கங்கை அமரன். இளையராஜா இசையமைக்க எஸ். ஜானகி தனது காந்தக் குரலால் அசத்தியது.
 

 
சிறு பொன்மணி அசையும் -  அதில் தெறிக்கும் புது இசையும்
 
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
 
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
 
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
 
 
1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கல்லுக்குள் ஈரம் . நிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம்.  

No comments:

Post a Comment